முதல் துளியில் கரைந்துவிட்டால்
நாமும் மழைநீர் தான்
சிறு ஓடை காத்திருக்கும்
சிறு புல்கள் ஆர்பரிக்கும்
மலர்கள் இதழில் ஊற அனுமதிக்கும்
குளங்கள் வரவேற்று குதுகலிக்கும்
மீன்கள் துள்ளி விளையாடும்
தவளைகள் கோரஸ் இசை பாடும்
இருபது விரல்கள் இணை சேரும்
ஈருடல் ஓருடலாய் உருமாறும்
கொட்டித் தீர்க்கும் வரை மழை
கோடானுகோடி கதைகள் பேசும்
நின்றுவிட்ட மழை
நீ நீங்கிப் போனதுபோல் இருக்கும்
விழி துளியை தூது அனுப்பும்
முதல் துளிக்குக் காத்து நிற்கும்
முதல் துளியில் கரைந்துவிட்டால்
நாமும் மழைநீர் தான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக