பேருந்தில் பயணிக்கும்
அதே வேளையில்
ஒரு பூங்காவிலும்
நின்று கொண்டிருக்கிறேன்
நீ
திரும்பிப் பார்க்காமல்
தொலைவில் சென்று
மெல்ல மெல்லத் தேய்ந்து
முற்றும் மறைந்து
அந்தப் பகலில்
ஒரு அமாவாசையை
விட்டுச் சென்றாய்...
பேருந்தில் விளக்குகள் போட்டு
இறங்குமிடம் வந்துவிட்டதாக
நடத்துனர் கூப்பிட்டார்...
இப்போது பூங்காவில்
இருளில் நின்றுகொண்டிருக்கும்
அதே வேளையில்
ஒரு பேருந்திலிருந்து
இறங்கிக்கொண்டும் இருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக