புதன், 30 ஆகஸ்ட், 2023


எப்போதும் போல் நீயில்லை
எப்போதும் போல் நானுமில்லை
உன் உடல்நலம் மட்டுமில்லை
நம் காலைப் பொழுதும் சரியில்லை...

மாலைப் பொழுதிற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று
மனதில் நித்தம் அக்கறையுடன் சுற்றி அலைந்தாலும்
அந்திப் பொழுதில் நான் வந்து சேர்ந்ததும்
முதலில் உன் நலம் விசாரிக்காதது
உனக்கு வலி கொடுத்திருக்கும் தான்

தாமதமாய் நான் மனம் வருந்தி
" இப்ப பரவாயில்லையா " எனக் கேட்டது
உன் உடல் மனம் இரண்டையும் தான்...

கண்ணீரோடு நீ கடிந்துரைத்த அத்தனையும்
நீ என்னிடம் எதிர்பார்த்த அன்பை முழம் போட்டது
அதனை அளந்துவிட முடியுமா என்ன?
எனினும் உன் குரலில் கண்ட தெம்பு
என்னைக் குளிர்வித்தது அம்மா...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக