சிறுகதையில் வண்ணதாசன்
கவிதையில் கல்யாண்ஜி
இயற்பெயரில் சி.கல்யாணசுந்தரம்
உண்மையில் தேடல் நீ...
நீர் நீ
நீர் இருக்கும் இடம் பொறுத்து
நின் பெயர்...
நீர் நீ
சுதந்திரமாய் உன் தாகம் துரத்து
நின்றாலும் சென்றாலும் ஓவியம்...
உன் தாகம் துரத்தி
பிறர் தாகம் தீர்க்கும்
தீர்க்கதரிசி நீ...
தீ நீ
எனில்
தீராத தீ நீ
மண் நீ
எனில்
ஒவ்வொரு துகளும் நட்சத்திரம்
வானம் நீ
எனில்
நிழல் மட்டும் தூவும் குடை நீ
காற்று நீ
எனில்
அன்பாய் தீண்டும் தென்றல் நீ...
உங்கள் வயதும், ஆரோக்கியமும்
உச்சம் தொட
தங்கள் இனிய பிறந்த நாளில்
இயற்கையை வேண்டுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக