திங்கள், 14 ஆகஸ்ட், 2023


நீ விழிகளை திறக்கும்போது
கடவுள் அதில் விளக்கேற்றுகிறார்
நான் வழிபடுகிறேன்...

உருகி நிற்கிறேன்
உன் பெயரை மந்திரமாய்
மனதிற்குள் சொல்கிறேன்...

பிறகு நடக்கும் எல்லாமும்
அற்புதங்கள், அதிசயங்கள்
உன்னிடமும் சொல்லாத இரகசியங்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக