நல்ல மனிதர்
நான் தவறிழைத்த போதெல்லாம்
மூன்றாம் கண்ணில் நோக்கியவர்
நிரந்தரமாய் இரு கண்களை மூடினாலும்
தன்னிரு கண்களாய் பாவித்த
இரு மகன்களில் எப்போதும் விழித்திருப்பார்...
'அழகு' என அக்காளை அழகாக அழைப்பவர்
'மாப்ள' என எனை அன்போடு அழைப்பவர்
அமைதியாகப் படுத்திருக்கிறார்
அமைதி ஆகிப் படுத்திருக்கிறார்...
அவர் ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக