பூத்து விரியும் பூவுக்குள்ளே
ஏங்கித் தவிக்கும் காமத் தழல்
பூங்காற்று வருடி வருடி வளர்த்தெடுக்கும்
உயிர் உருகி உருகி இனித்திருக்கும்
தனித்து தவித்த புழு தவமிருக்கும்
கடும் தவத்தில் புற்றெழுந்து தனை மறைக்கும்
வண்ணச் சிறகு இரண்டு வரம் கிடைக்கும்
பூங்காற்று வந்து அதன் சிறை உடைக்கும்
பட்டாம்பூச்சிக்கு பூங்காற்றைப் படிக்கத் தெரியும்
பூத்து விரிந்த பூவை இப்படித்தான் அறியும்
இங்கும் அங்கும் தேடித்தேடி அலையும்
ஜீபீஎஸ் இல்லாமலே உண்மைக்காதல் இணையும்
தேன் குடித்த பட்டாம்பூச்சி மதி மயங்கும்
பூப் பூவாய் நாடிநாடி நிதம் கிறங்கும்
தேன் கொடுத்த பூவின் இதயம் காயாகும்
உள்ளிருக்கும் நினைவுகள்தான் மெல்லக் கனியாகும்
காம தீப விளையாட்டு
அசைத்துப் பார்க்கும் பூங்காற்று
பூவும் புழுவும் மட்டுமல்ல
உலகம் முழுதும் இரையாகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக