கோவில்
மசூதி
தேவாலயம்
எல்லாம் தெரிகிறது
அந்தரத்தில் தொங்கும் குழந்தைக்கு
ஆனால்
எந்தக் கடவுளுக்கும் தெரியவில்லை
அந்தரத்தில் தொங்கும் குழந்தையை...
கடவுள் உண்டு
கடவுள் இல்லை
எனும் கூட்டம்
கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறது
ஆனால்
அங்கு மனிதர்கள்
யாரும் இல்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக