நிலம் இல்லாதவனுக்கு
நிழல் தேவைதானா...
பட்டா போடாத
வானம் இருக்கிறது
சிறகுகள் தேவைதானா...
பட்டாம்பூச்சி ஆக
கனவுக் கூட்டில் புழுவானேன்
வெயில் கத்தி
எனைச் சுத்தி
சிறகுகள் வெட்டப் புழுவானேன்
வானம் இல்லை
நிலமும் இல்லை
மண்ணைக் குடைந்து போகின்றேன்
கடவுள் கொடுத்த வீடுபேறு
அதற்குள் இருக்கக் காண்கின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக