எல்லா ஆணிகளையும்
பகல் பொழுதில் ஏற்றுக்கொள்கிறேன்
பழகிவிட்ட ஆணிகள்
என்னில் இரத்தம் குடிப்பதில்லை
இரவு
கருணையுடன் வந்து
தனது மடியை விரிக்கிறது
அதில் தலை சாய்ந்து
கண்கள் மூடி மரிக்கிறேன்
உயிர்த்தெழும் பொழுதில்
வெறும் நான்கைந்து மணிநேரங்களில்
முடிந்து விட்டிருக்கிறது
இரண்டு நாட்கள்
மூன்றாம் நாளில்
ஏக்கத்தோடு காத்திருக்கிறது
ஆணிகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக