வானம் கடலாகி
அலை அலையாய் வந்து நனைக்கிறது
மழைத் துளி
மண்ணில் கடலாக
விழுந்து கிடக்கிறது வானம்
விண் மீன்களைக் கூடையில்
ஒய்யாரமாய் கொண்டு வருகிறாள்
மீன்காரி
மூக்குத்தி இல்லாமல் - அவள்
முகம் சுத்தி ஜொலிக்கிறது
வானுக்கும் தேவதைக்கும்
பூர்வ ஜென்மத் தொடர்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக