உன்னைத்தான் கண்டேன்
பின் தொடர்ந்தேன்
தொடர்ந்து கூப்பிட்டேன்
நெருங்கி வந்தேன்
திரும்பி நீ பார்க்கவில்லை
திரும்பத்திரும்ப நான் பார்க்கிறேன்
நெருங்கி நெருங்கி வந்து
தொடர்ந்து கூப்பிட்டேன்
முன் வந்து மறித்தேன்
துணியால் மூடிய முகம்
நெற்றி வானமாய்
கண்கள் இரு நிலவாய்
மேகமாய் நான்
காற்றில் தவழ்கிறேன்
யாரோ போல்
எனை நீ பார்த்தாலும்
உன்னைத்தான் நான் பார்க்கின்றேன்
உன்னைப் போல் உள்ளவரை எல்லாம்
எனக்காக இறைவன் படைத்தானா
நீ என்னை விட்டுப்போவதை
இறைவன் அன்றே அறிந்தானா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக