தப்பாகவே பார்த்து
சிலரை பழக்கி விட்டார்கள்
தப்பான காரியங்களுக்கு
நல்லவனாகவே பார்த்து
சிலரை பழக்கி விட்டார்கள்
நல்ல காரியங்களுக்கு
யாரும் பார்க்காத
தானும் பார்க்காத
தருணங்களில் தானே
உண்மை தெரிகிறது
இரவும் பகலும்
இல்லாத நாள் இல்லை
சரியும் தவறும்
இல்லாத ஆள் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக