வியாழன், 22 ஜூலை, 2021

நத்தை

 



செடியிலிருந்து ஒரு மலர்
மெல்ல இறங்கிப் போகிறது
உறவுகளிலிருந்து உதிர்ந்து
தனிமையில் மட்டும் மலர்ந்து...

கண்களை ஈர்க்கிறது
பேசாததையும் கேட்கிறது
புத்தரைப் போல மௌனத்தை
ஞான உபதேசம் செய்கிறது

காத்திருந்து காலம்
காற்று வேகத்தில் பாய்கிறது
கடந்து போனது மலரல்ல
நந்தவனத்து மாயோன்

முதுகில் சிலுவை
சுவடெங்கிலும் இரத்த வைரச்சரிகை
நில்லாது ஏற்றும் பாவச்சுமை
இல்லாது போகும் இறை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக