கதவுகளை நீ திறக்கும் போது
உனக்காக என்று நீயும்
எனக்காக என்று நானும்
தனக்காக என்று கதவும்
தலையசைத்த தருணத்தில்
காற்று இரண்டு கட்டிக்கொண்டு
ஒன்றானது...
உன்னை நான் கட்டிக்கொள்ள பார்க்கிறேன்
கதவை நீ கட்டிக்கொண்டு சிரிக்கிறாய்
சட்டமிட்ட உன் புகைப்படங்களை
கண்களில் புகைப்படம் எடுக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக