நிழல் என்று தெரியாமல்
நிஜம் தினம் வந்து
காத்திருக்கும்...
செடியிலிருந்து ஒரு மலர்
மெல்ல இறங்கிப் போகிறது
உறவுகளிலிருந்து உதிர்ந்து
தனிமையில் மட்டும் மலர்ந்து...
கண்களை ஈர்க்கிறது
பேசாததையும் கேட்கிறது
புத்தரைப் போல மௌனத்தை
ஞான உபதேசம் செய்கிறது
காத்திருந்து காலம்
காற்று வேகத்தில் பாய்கிறது
கடந்து போனது மலரல்ல
நந்தவனத்து மாயோன்
முதுகில் சிலுவை
சுவடெங்கிலும் இரத்த வைரச்சரிகை
நில்லாது ஏற்றும் பாவச்சுமை
இல்லாது போகும் இறை...
அன்னை வளர்ப்பில் வளந்த
பிள்ளை இல்லை நான்
அவன் மறைந்துவிட்டான்
எங்கோ தொலைந்துவிட்டான்
ஆங்காங்கே மறைந்து நின்று பார்ப்பான்
நான் அன்னையை
நேரில் நின்று பார்ப்பதுபோல்...
என் நண்பன் இப்போது
அன்னை இல்லாமல் பார்ப்பதுபோல்...
அவள் எப்போதும் இருக்கிறாள்
நாம்தான் இல்லை
அன்னை வளர்ப்பில் வளர்ந்த
பிள்ளைகள் இல்லை நாம்
அவர்கள் அப்போது பெரிய சுகவாசி...
பூக்கள் ஆகிடத் துடிக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணத்துப்பூச்சி ஆகிடத் தவமிருக்கும்
பூக்கள்
இரண்டும் ஆகிடத் தவிக்கும்
மனது
ஒன்றாய் இருந்து பார்க்கும்
இதயம்
எல்லாம் வந்தது
ஒன்றுமிலாததிலிருந்து...
ஆமாம்
இப்போது ஒன்றுமில்லாது போனது...
மீண்டும் பூக்கள்
மீண்டும் வண்ணத்துப்பூச்சி
மீண்டும் மனது
மீண்டும் இதயம்
மீண்டும் வெற்றிடம்...
( ஆண் - 1 ; பெண் - 2 )
1
நீதான் அடி நீதான்
அடி நீதானே பெண்ணே
ஒரு வார்த்த சொல்லிப் போன...
வெயிலோடு நின்னு
நீ உறவாடச் சொன்ன
அதனால நானும் நின்ன...
கண்ணாலத் தாண்டி
நீ கொல்லாமக் கொன்ன
உசுரோட என்னத் தின்ன...
2
மாமா என் மாமா
நீ பழி சொல்லலாமா
என் உசுரே அது உனக்காகத்தான்...
வேணா இது வேணா
நீ வெயிலோடு நின்னா
தாங்காது இந்தக் கண்ணு...
நினவோ இது கனவோ
அட எதுவானா என்ன
நான் விளையாட்டா தானே சொன்னேன்...
1
நீதான் அடி நீதான்
அடி நீதானே பெண்ணே
என் உசுரும் அது உனக்காகத்தான்...
2
நீ பசி ஆற வேணும்
என் மடி சாய வேணும்
நீ தூங்க நான் ரசிக்க வேணும்...
1
பசி தூக்கம் போச்சு
பல நாளு ஆச்சு
பறந்தோடி வாடி புள்ள...
2
உன் நினைவோடு தானே
உயிர் வாழ்கிறேனே
தன்னால வருவேன் நானே...
1
என் உசுரே அது உனக்காகத்தான்...
2
என் உசுரே அது உனக்காகத்தான்...
1&2
என் உசுரே அது உனக்காகத்தான்...