வியாழன், 4 பிப்ரவரி, 2021

 


வானக் குடைப் பிடித்து
நாளும் கூட வரும்
நாயகியைக் காணவில்லை
நானும் தேடுவதை நிறுத்தவில்லை

என் நிழல்
உன்னைச் சேர்ந்ததைப் போல்
உணருகிறேன்
உச்சி வெயில் வேளையிலும்
அதனால் தான்
குளிருகிறேன்

உன் நிழல் கூட
முகம் காட்ட மறுப்பதேனடி
மறைந்து கொண்டு
என் மனதில் சிரிப்பதேனடி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக