இலாபம் பார்க்காமல்
வாழ்வது எப்படி?
நதி சொல்கிறது
மதி கேட்கவில்லை
நாளெல்லாம் திருவிழா
இசையும் நடனமும்
இறுதிவரை
தாகத்திற்கு
தன்னைக் கொடுக்கும்
மேகத்தையும்
காகத்தையும்
பேதம் என்றும்
பார்த்ததில்லை
ஒட்டி வாழும்
மீனும்
எட்டி ஓடும்
மானும்
நட்பு மட்டுமே
யாவும்
கரங்கள் இன்றியும்
ஈனும்
கடலில் முடிந்தபோதிலும்
கர்ணனாகவே
கார்மேகம் சேரும்...
இலாபம் பார்க்காமல்
வாழ்வது எப்படி?
நதி சொல்கிறது
மதி கேட்கவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக