விஜயகாந்த் எனும் விஜயராஜ் அழகர்சாமி
தனக்காகத் துடிக்கும் இதயம்
எல்லோரிடமும் உண்டு
பிறருக்காக துடிக்கும் இதயம்
உன்னிடத்தில் கொண்டு
பசித்தவர்களுக்கு விருந்தளித் தாய்
நீ வள்ளல்களில் ஒன்று
நாக்கை மடித்துப் பேசினாலும்
நாட்டைக் காக்கவே சொற்கள் வீசுவாய்
அருவாக் கத்தி, சம்மட்டிச் சுத்தி
கைப்பிடிச்ச ஆளு, குழந்தை மனசுக்காரு
கேப்டன் செல்லப் பேரு
உன் சிரிப்பு வெள்ளைச் சோறு...
இதயம் துடிக்காமல் படுத்திருக்கிறாய்
இதயம் துடிதுடிக்க விட்டுச்செல்கிறாய்
கடைசி வரையில் தந்து மகிழ்ந்தாய்
தன்னிறைவடைந்தாய்
இயற்கைத் தாழ் சரண் புகுந்தாய்
இனி கருணை மழையாய் பொழிவாய்
என்றும் பசுமையாய் மனதில் நிறைவாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக