காட்டின் கண்களில்
பறவை உண்டு
பறவை கண்களில்
காடு உண்டு
கொடுத்துப் பெறுவதில்
தழைத்து வளர்கிறது
காடு
அழித்துப் பறிப்பதில்
கொழுத்து வளர்கிறது
நாடு
நாம் படித்துப் படித்து அழிக்கிறோம்
பறவைப் பறந்துப் பறந்து வளர்க்கிறது
காடு...
காட்டின் கண்களில்
பறவை உண்டு
பறவை கண்களில்
காடு உண்டு
மனிதன் கண்களில்
இயற்கை இல்லை
இயற்கை கண்களில்
மனிதன் இல்லை
கண்கள் இல்லாத உலகம்
வளர்ந்து வருகிறது
இதயம் இல்லாத மனிதன்
அதில் பிழைத்து வருகிறான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக