ஞாயிறு, 10 டிசம்பர், 2023

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி


நண்பன் பாரதி
கம்பன் பாரதி
நல்லக் கவிதையெல்லாம் பாரதி...

புதுவை புயலில் இறந்த
பறவைகளைத் தன் கைகளால்
அடக்கம் செய்தவன் பாரதி...

தன்னை மறந்தவன் பாரதி
தரணியின் கண்கள்  பாரதி
உலகை உடலாக உணர்ந்தவன் பாரதி...

தீக்குள் விரலை வைத்து
சுடும் சுடரை
பாட்டில் வைத்தவன் பாரதி...

சிட்டுக்குருவிகளுக்கு
தன் உணவளித்து
பட்டினி கிடப்பான் பாரதி...

மீசை பாரதி
தலைப்பாகை பாரதி
கனல்பார்வை பாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக