மீன் பிடிக்கவில்லை
மீன் விற்கவில்லை
காலி அன்னக்கூடை கூட
எவர் வீட்டிலும் இல்லை
சிப்பி பொறுக்கவில்லை
சங்கு எடுக்கவில்லை
கெண்டைக்காலைக் கூட
கடலில் நனைத்தது இல்லை
இவர்கள் MRC நகரினிலே கட்டிய
கடற்கரையோர மாளிகைகள் மட்டும்
ஆக்கிரமிப்பு பட்டியலில் இல்லை
பட்டினப்பாக்கம் வரைதானாம்
பட்டினத்தாரின் பிள்ளைகள்
கையில் கரும்பு கொடுத்து
பரதேசம் அனுப்புகிறார்
இனி இந்தச் சிங்காரச் சென்னை
சீமான் சீமாட்டிகளுக்கு மட்டும்தான்
இறந்தாலும் அவர்கள் அங்கே இளைப்பாறுவார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக