வெள்ளி, 14 ஏப்ரல், 2023


மழையில் நனைகின்ற பறவையை
ஓவியத்தில் கொண்டு வைத்து
நனையாமல் இருக்கச் செய்கிறது
வளர்ந்து பறந்து தொலைந்திடாத
ஒரு குழந்தை...

மழையை அந்தரத்தில் நிறுத்தி
பறவையை அன்பிடத்தில் நிறுத்தி
தன் சிந்தையெல்லாம் ஓவியத்தில் நிறுத்தி
பார்த்துக்கொண்டு இருக்கிறது
வளர்ந்து பறந்து தொலைந்திடாத
ஒரு குழந்தை...

கொஞ்ச நேரத்தில்
தனக்கு பசிக்கும் போது
மறக்காமல் சில மீன்களை வரையும்
வளர்ந்து பறந்து தொலைந்திடாத
அந்தக் குழந்தை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக