வெளியில் போகும்போது
காற்றில் சிலுவை வரைவாள்
உள்ளம் நோகும்போது
நெற்றியில் திருநீறு பூசுவாள்
உடல் கெடும்போது
மசூதிப் பெரியவரிடம் சொல்லி ஓதுவாள்
நான் நலமுற வளமுற
அவளுக்கு தெரிந்த
அத்தனையும் செய்து பார்க்கிறாள்
நான் எதுவும் தெரியாமல்
செய்வதறியாமல்
வெறுமெனவே பார்க்கிறேன்
நான்
வெறுமெனவே பார்ப்பதில்
வெறுமெனவே சிரிப்பதில்
அம்மாவுக்கு மட்டும்தான்
அத்தனை சந்தோஷம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக