கவிதைகள்
என் வழி வந்து
இறங்கையில்
நம்பத் தோன்றுகிறது
சாமி
சிலரில் வந்து
இறங்கும் என
சாமி இறங்கியவன்
இறந்து விடுகிறான்
வேறு ஒருவனாய்
பிறந்து விடுகிறான்
பிறந்தவனுக்கு
சாமி
கற்ப்பிக்கப் படுகிறது
தன்னை உணர்ந்தவனை
உயிர்பலி கேட்கும் சாமி
அறிந்தவனுக்கு மட்டும்
அடைக்கலம் கொடுக்கிறது
சொர்க்கத்தில் வாழ்பவர்கள்
இதயத்தில் இருக்கிறார்கள்
நரகத்தில் வாழ்பவர்கள்
கண்ட இடங்களில் எல்லாம்
இருக்கிறார்கள்
அடைக்கலம் சிறை
உயிர்பலி சுதந்திரம்
பறந்துத் திரிபவர்கள்
வணங்குவது இல்லை
வணங்கும் கைகள்
பறப்பது இல்லை
என் வழி வந்து
இறங்கையில்
நம்பத் தோன்றுகிறது
சாமி
சிலரில் வந்து
இறங்கும் என
சாமி இறங்கியவன்
இறந்து விடுகிறான்
வேறு ஒருவனாய்
பிறந்து விடுகிறான்
பிறந்தவனுக்கு
சாமி
கற்ப்பிக்கப் படுகிறது
தன்னை உணர்ந்தவனை
உயிர்பலி கேட்கும் சாமி
அறிந்தவனுக்கு மட்டும்
அடைக்கலம் கொடுக்கிறது
சொர்க்கத்தில் வாழ்பவர்கள்
இதயத்தில் இருக்கிறார்கள்
நரகத்தில் வாழ்பவர்கள்
கண்ட இடங்களில் எல்லாம்
இருக்கிறார்கள்
அடைக்கலம் சிறை
உயிர்பலி சுதந்திரம்
பறந்துத் திரிபவர்கள்
வணங்குவது இல்லை
வணங்கும் கைகள்
பறப்பது இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக