வியாழன், 24 அக்டோபர், 2019


பறவைகளும் பூச்சுகளும்
பாடசாலை போவதில்லை
வண்ணத்துப்பூச்சிகளும்
தேவசாலை போவதில்லை
மண்ணில் உயிரோவியமாய்
விவசாயம் செய்துவிடும்
விளையும் யாவையுமே
பொதுவென்று விட்டுவிடும்
சாலையிட்டு வாழும் நீயோ
விஷச்சாயம் மண்ணிலிட்டாய்
சுணக்கமின்றி தந்த மண்ணை
இரக்கமின்றி கொன்றுவிட்டாய்
புழுவாய் பூச்சாய்
மாறும் மனிதா
உணவு ஊட்டி
வளர்த்த உன்னை
இறந்தும் மீண்டும்
உணவாய் உறவாய்
உன் முன்னோர் தானே
காணும் இயற்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக