சனி, 5 அக்டோபர், 2019

தனிமையின் விரல் பிடித்து
அழைத்துச் செல்கின்றன
நினைவுக் கரங்கள்

புன்னகையால் கிள்ளிவிட்டு
கண்ணீரில் மூழ்கச் செய்யும்
விசித்திரக் கரங்கள்

எந்த வயதிலும்
நடைபழக ஏந்திச் செல்லும்
நம்பிக்கைக் கரங்கள்

பழகிய நடையை
கைபிடித்துக் கூட்டிச் செல்லும்
மாயக் கரங்கள்

உன்னை உதறிவிட்டு
நடந்து திரிகின்றன சில
நடைப் பிணங்கள்

இரவைத் தவறவிட்ட
விட்டில் பூச்சிகள்
வெளிச்சம் தேடியே
மாய்த்துக் கொள்கின்றன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக