தனிமையின் விரல் பிடித்து
அழைத்துச் செல்கின்றன
நினைவுக் கரங்கள்
புன்னகையால் கிள்ளிவிட்டு
கண்ணீரில் மூழ்கச் செய்யும்
விசித்திரக் கரங்கள்
எந்த வயதிலும்
நடைபழக ஏந்திச் செல்லும்
நம்பிக்கைக் கரங்கள்
பழகிய நடையை
கைபிடித்துக் கூட்டிச் செல்லும்
மாயக் கரங்கள்
உன்னை உதறிவிட்டு
நடந்து திரிகின்றன சில
நடைப் பிணங்கள்
இரவைத் தவறவிட்ட
விட்டில் பூச்சிகள்
வெளிச்சம் தேடியே
மாய்த்துக் கொள்கின்றன
அழைத்துச் செல்கின்றன
நினைவுக் கரங்கள்
புன்னகையால் கிள்ளிவிட்டு
கண்ணீரில் மூழ்கச் செய்யும்
விசித்திரக் கரங்கள்
எந்த வயதிலும்
நடைபழக ஏந்திச் செல்லும்
நம்பிக்கைக் கரங்கள்
பழகிய நடையை
கைபிடித்துக் கூட்டிச் செல்லும்
மாயக் கரங்கள்
உன்னை உதறிவிட்டு
நடந்து திரிகின்றன சில
நடைப் பிணங்கள்
இரவைத் தவறவிட்ட
விட்டில் பூச்சிகள்
வெளிச்சம் தேடியே
மாய்த்துக் கொள்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக