சனி, 26 அக்டோபர், 2019

எவர்
மண்ணிலும் நெஞ்சிலும்
ஈரமில்லை

குழிப் பறிப்பதற்கு
பழகிவிட்ட சமூகம்
பணத்தை மட்டுமே
பூட்டி வைக்கிறது

தலைக் கவசம்
விற்க்கச் சென்றுவிட்டாள்
எங்கள் நீதி தேவதை

ஆழ்குழாய்க் கிணறுகள்
கீழே இருப்பதால்
அரசியல்வாதிகள் அதிகாரிகள்
நேர்கொண்டப் பார்வையில்
விழாமல் போனது

விளம்பரம் தேடும்
பணியின் ஊடாக
பெரும் மனதோடு
உறவாடும் ஊடகங்கள்

இளைஞர்கள் எல்லோரும்
மேலேத் தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள்
ஏதோவொரு கதாநாயகனை

தலை குனிந்து
நிற்பது வீண்
தேடுதலோ தேர்தலோ
நாம் தேடுபவர்கள்
ஆழ்குழிக்குள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக