செவ்வாய், 29 அக்டோபர், 2019

பத்து லட்சம் என்பதால்
பரிதாபமாகிப் போனாயோ...

பல ஆயிரம் கோடிகளெல்லாம்
பகட்டாய் உலவுகிறது
பல நூறு தவறு செய்து

வெறும் கையுடன் பிறந்த
ஒரு குற்றத்திற்காகவே
இங்கு பலர்
கொல்லப்படுகிறார்

இரண்டு கைகளில்
கிடைப்பது போதும்
ஒரு கைக்கும் கிடைக்காமல்
பறிப்பது பாவம்

பேராசையால்
பறிக்கும் குழிகளில் தான்
எத்தனைச் சடலங்கள்...

எவர் சேர்த்துவைத்த
ஒவ்வொரு பத்து லட்சமும்
ஒரு படுகொலை

எந்த
சட்டமும் பேசாது
சாமியும் பேசாது

பல்கிப் பெருகிக்
கொழுத்தப் பணக்காரர்களே
உங்களுக்கு
ஒருபோதும் கூசாதா

வலி
வரும்போது மட்டும் உணரும்
உங்கள் இதயம்
பிறர் வலி பற்றிப்
பேசாதா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக