வியாழன், 22 அக்டோபர், 2020

 


மழைச் சாரல்
கையைப் பிடித்து இழுக்கிறது
உடல் பணிச் சுமையால்
தயங்கி ஒதுங்கி இருக்கிறது
மனம் குழந்தையாகி
ஜன்னல் தாண்டிக் குதிக்கிறது
நீர்க் குமிழி கப்பல்களை
தள்ளிவிட்டு ரசிக்கிறது
மின்னல் கயிறுகளை
எட்டித் தாவிப் பிடிக்கிறது
சட்டெனவே கயிறறுந்து விடுகிறது
தொப்பெனவே குழந்தை மனம் விழுகிறது
மழையைக் கட்டிப்பிடித்து
இங்கும் அங்கும் புரள்கிறது
தள்ளி நிற்கும்
இந்த உடல் ஏனோ நடுங்குகிறது...
கையைக் கூட நனைக்காமல்
கண்கள் மட்டும் நனைந்து
பார்த்துக்கொண்டு இருக்கிறது
மனக் குழந்தையின் சேட்டைகளை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக