ஞாயிறு, 18 அக்டோபர், 2020

 


இயற்கை மடியில்
தலைசாயும் போது
தாலாட்டு கேட்கிறது...

மௌன கீதத்தில்
சங்கீதம் சேர்கிறது
பறவையின் கீச் ஒலி
நீர் பரப்பின் மீது
துள்ளிக் குதிக்கும் மீன் ஒலி
நாக்கில்லாத மூங்கில் சேர்க்கும்
ஆலாபனை ஒலி
இலையும் கிளையும்
மரமும் கொடியும்
அசைந்து எழும்பும்
மங்கல ஒலி
காதின் அருகே பறந்து செல்லும் 
தட்டான் பட்டாம் பூச்சிகள் சிறகொலி
வெட்டுக்கிளிகள் தாவும் ஒலி
தவளைகளின் கோரஸ் ஒலி
மௌன கீதத்தில்
சங்கீதம் சேர்கிறது
தாலாட்டு கேட்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக