உடலென்னும் சிறையில்
நாம் அவர்களைப் பார்க்கலாம்
உலகென்னும் சிறையில்
அவர்கள் நம்மைப் பார்க்கலாம்
அவர்கள்
புறத்தை அலங்கரிப்பதில்லை
அகத்தின் அலங்காரம்
நமக்குப் புரிவதில்லை
யார் இங்கு
மெய்யை மெய்யாய் அறிந்தவர்
நிஜங்கள் பொதுவானது அல்ல
சமூகம் ஒரு புனைவு
சக மனிதர்களின் கனவு
யாரிடம் இல்லை மனப்பிறழ்வு
சித்தன் கூட பித்தன் தானே
நாம் அவர்களைப் பார்க்கலாம்
உலகென்னும் சிறையில்
அவர்கள் நம்மைப் பார்க்கலாம்
அவர்கள்
புறத்தை அலங்கரிப்பதில்லை
அகத்தின் அலங்காரம்
நமக்குப் புரிவதில்லை
யார் இங்கு
மெய்யை மெய்யாய் அறிந்தவர்
நிஜங்கள் பொதுவானது அல்ல
சமூகம் ஒரு புனைவு
சக மனிதர்களின் கனவு
யாரிடம் இல்லை மனப்பிறழ்வு
சித்தன் கூட பித்தன் தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக