வியாழன், 12 செப்டம்பர், 2019

குழந்தை மனம் வேண்டும்

அவர்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்
உயிர் விட்டு அழுகின்றனர்
கண்ணீரில் கரைகின்றனர்

அன்பை முழம் போடத் தெரியாதவர்கள்

பயத்தின் ஆழம் அறியாதவர்கள்

பரவசப் பட்டாம்பூச்சிகள்

அவர்கள்
ஒவ்வொரு வார்த்தையும்
மலரும்
தேன் சிந்தும்

ஆரவாரங்களில்
மூழ்கித் தொலைபவர்கள்


மெய்யாக வாழ்வதை அவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்


குழந்தைகளை வளருங்கள் கடமை

குழந்தை மனதை வளர்ப்பது மடமை

குழந்தை மனம் வேண்டும்

வாழ்வதற்கு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக