புதன், 11 செப்டம்பர், 2019

நல்லவர்களால் செய்யப்பட்டச் சட்டம்
எப்படித் தீயவர்களுக்குப் பொருந்தும்

நல்லவர்கள் இடரி வீழ்வதைக் கூட
தாங்கிப் பிடிக்காது

நடந்துவந்த பாதையை நாமறியாமல் யாரறிவார்

அமைதி என்றுமே சாட்சியாய்
கூடவே பயணிக்கிறது

குற்றவாளிகள் என யாரும் இல்லை
குற்றச் சூழ்நிலைகள் தான் உருவாக்கப்படுகின்றன

இதில் பங்களிக்காதவர் பிறக்கவே இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் பங்குண்டு
பட்டப்பகல் நட்டநடுஇரவு எதற்குமே விதிவிலக்கல்ல

கொடுக்குச் சுத்தியலால் தட்டித்தட்டி
அமைதியை மென்மேலும் குலைத்து
சட்டச் சிலந்திகள் கொழுத்துக் கொண்டே போகிறது

பாவம் இரைகள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக