செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நான்

நதியைப் பிரிந்து
நினைவில் நீந்தும்
படகு

வானம் பார்த்து
தவிக்கும் ஒற்றைச்
சிறகு

தடம் தவறி
சுற்றித் திரியும்
எறும்பு

குழந்தை ஒன்றின்
அரவணைக்கப் படாத
குறும்பு

பத்து மாதம்
கலையாமல் தொடரும்
கனவு

பிரசவ வலியுடன்
ஏங்கித் தவிக்கும்
கவிதை

உன் பேச்சுக்காக
தவம் கிடக்கும்
மௌனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக