இலைகள் இல்லாத
இன்னும் உதிராத
ஒரு பூவை எனக்குத் தெரியும்
கண்கள் சிமிட்டும்
இதழ்கள் சுழிக்கும்
அத்தனை அழகாய் இருக்கும்
பட்டினியாய் கிடக்கையில்
பசி ஆற்ற
முத்தம் தரும்
நான் தனித்து இருக்கையில்
அந்த ஒற்றைப் பூ
தோட்டம் ஆகும்
இரவிலும் பூக்கும்
கனவிலும் பூக்கும்
என் வாழ்வெங்கும் கூட நடந்து வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக