செவ்வாய், 10 ஜூன், 2025


இலைகள் இல்லாத

இன்னும் உதிராத

ஒரு பூவை எனக்குத் தெரியும்


கண்கள் சிமிட்டும்

இதழ்கள் சுழிக்கும்

அத்தனை அழகாய் இருக்கும்


பட்டினியாய் கிடக்கையில்

பசி ஆற்ற

முத்தம் தரும்


நான் தனித்து இருக்கையில்

அந்த ஒற்றைப் பூ

தோட்டம் ஆகும்


இரவிலும் பூக்கும்

கனவிலும் பூக்கும்

என் வாழ்வெங்கும் கூட நடந்து வரும்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக