பாறை
மென்மையாக மௌனமாக
பூவைப் போலவே இருக்கிறது...
உதிர்ந்து விழுந்தாலும்
மலர்ந்தே இருக்கிறது
கண் அயர்வதும் இல்லை...
எத்தனைக் குளிர் உள்ளிருந்தால்
அத்தனை வெயிலையும் விழுங்கும்
யார் தந்ததோ அந்த முத்தம்...
எம்ஜிஆர் சிவாஜி போல்
இருக்க முயன்றவரெல்லாம்
தன் பிள்ளை தனைப் போல்
இருக்க நினைத்தார்
ரஜினி கமல் போல்
இருக்க முயன்றவரெல்லாம்
தன் பிள்ளை தனைப் போல்
இருந்திட நினைக்கிறோம்
விஜய் அஜித் போல்
இருக்க முயலும் அவனும்
தன் பிள்ளை தனைப் போல்
இருக்கவே நினைப்பான்
அப்பனுக்குத் தப்பாமல்
பிறந்த எனைப் போல
எனக்குத் தப்பாமல்
பிறந்த மகன் போல
அவனவனுக்கு அவன்
பிறக்கின்றான் அவனியிலே...