திங்கள், 19 டிசம்பர், 2022


நாளெல்லாம் சிறகசைத்து
பறவையெல்லாம் பரிதவித்து
திசையெல்லாம் அலைந்து திரிந்து
அலகின் அளவே தினமும் விருந்து

நாளெல்லாம் துடுப்பசைத்து
மீனெல்லாம் துடிதுடித்து
கடலெல்லாம்  நனைந்து தவழ்ந்து
துளி எனவே வயிறு நிறைந்து

நாளெல்லாம் மனதசைத்து
மனிதரெல்லாம் படபடத்தது
உலகெல்லாம் இயற்கை கவர்ந்து
மலை மலையாய் மிச்சம் குவிந்து

பறவையாய் மீனாய் வாழும் சிலரை
இயற்கையை அழிக்கும் குணமிலாத தூயவரை
குறவரை உழவரை லாபம் கருதாதோரை
புனர்வாழ்வு தருவதாய் அருள்வதாய்
உரைப்பதும் நினைப்பதும் உகந்ததாய் இல்லையே...

உடல் உழைத்து உயிர் வாழ்ந்து
புண்ணியம் சேர்த்து தலைமுறைகள் சேர்ந்து
ஒன்றுபட்ட உறவை ஒப்பில்லாத அன்பை
நாமும் கற்க வேண்டும்
இதைப் பாடமாக்க வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக