கலங்கித் தெளிந்த நீரில்
எதையும் திருத்தம் செய்யாமல்
அப்படியே வரையப் பார்க்கிறது இயற்கை
ஒரு சிறிய இலையேனும்
ஒரு சிறிய இறகேனும்
அதற்குள் உதிர்ந்திருக்கும்...
கலைந்த நீரும் ஓவியம்
கலையும் மேகம் ஓவியம்
காண்பதெல்லாம் ஓவியம்
துள்ளியமாய் வரையும் இயற்கை
இரவெல்லாம் வரைகிறது
இமைகள் தாண்டி துயிலை கனவை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக