நீ அடைந்த உயரம்
எனக்குத் தெரியாமல்
நான் அடைந்த உயரம்
உனக்குத் தெரியாமல்
நாம் கூடியிருப்பது
யாருக்கும் தெரியாமல்
மிக நெருக்கமாகவும்
வெகு தூரமாகவும்
ஒரே தருணத்தில்
ஒருங்கிணைவது அற்புதம்...
இதை
காமம் என்கிறாய்
இல்லை
கவிதை என்கிறேன்
மௌனம்
இரண்டையும்
ஒன்றாக்கியது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக