பத்திரகாளி வேடமிட்டவள்
பத்திரமாய் வீடு வந்தால்
வேடமிட்டால்தான்
இங்கு வாழ்க்கை
உள்ளும் வெளியும்
எல்லா காக்கையும்
ஒரே போல
எல்லா எறும்புகளும்
ஒரே போல...
உள்ளே
ஒரே போல இருக்கும்
மனித முகங்கள் தான்
வெளியே
ஒரே போல இல்லாமல்
வேடமிட்டு அலைகிறது
உலக நாடக மேடையில்
மனிதன் மட்டுமே வேடதாரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக