பேசும் விழி
நீ எனக்கு
கேட்கும் செவி
நான் உனக்கு
என் இதயம்
இப்படித்தான்
உனை விழுங்கிக் கொண்டே
இருக்கிறது
என்னை விழுங்க
உன் இதயம் துடிக்கிறதா...
சப்தம் என்னில்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
என்
மௌனப் பசி
தீர்த்து
நீ
என்னை ருசி...
வெகுநேரம் ஆகியும்
தீராத பசி
உணர்த்தியது
நான் விழுங்குவது
உன் மௌனமென்று
இரு இதயம்
ஒன்றானால்
ஒன்றை ஒன்று
மௌனமாக விழுங்கி
முடிவில்
ஒன்றும்
இல்லாமல் போகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக