இரவெல்லாம் முழு மூச்சாய்
தூங்கி உழைத்து
ஆற்றலை ஈட்டுகிறேன்
பகலெல்லாம் பலப்பல
துண்டுத்துண்டுக் காரியங்களில்
ஓய்வெடுத்துக் கரைக்கிறேன்
பகலெல்லாம் முழு மூச்சாய்
ஒரு வேலை
ஒரு ஓய்வு வேண்டும்
பொழுதெல்லாம்
ஒரு மூச்சில்
ஒரு பயணம் போகும்வரை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக