செவ்வாய், 1 ஏப்ரல், 2025

அமுது...


தாகம் தீர்க்க

கண்ணீர் தேடி வரும்

இரவு


இருளுக்குள் 

சுரக்கும் சுனையை

சத்தமில்லாமல் பருகும்


நான் அழுது 

நீ குடிக்க வா

கண்ணீர் பால்


இப்படியே இப்படியே

இல்லாமல் போகிறது

எனக்கான நாளைய பால்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக