இரு கண்கள் இதமாய் இணைகிறதே
இருக்கின்ற நிமிடங்கள் மறைகிறதே
இதய வாசல் திறக்கிறதே
இதழ்கள் மட்டும் மறுக்கிறதே
விரல்களின் தயக்கம் விடுபடுமா
வீணையின் கேள்விக்கு விடை வருமா
வண்ணம் எல்லாம் உரு பெறுமா
என் காதல் ஓவியம் உயிர் பெறுமா
பனிமூட்டப் பாதை உள்ளே
பார்வை தெரியாமல்
பாவை நெஞ்சம் அது
சிறையென்று அறியாமல்
சிக்கித் தவித்தேன்
காதல் பித்துப் பிடித்தேன்
மோகம் எனும் தீயினுள்ளே
நாளும் குளித்தேன்
மீண்டும் வந்தாள் என் தேவதையை
தயக்கம் என்னில் இன்னும் போகலையே
நீங்கிச் சென்றாள் சிறு சிரிப்புதிர்த்து
பின் தொடர்ந்தேன் அவள் நிழலணைத்து
இரு கண்கள் இதமாய் இணைகிறதே
இருக்கின்ற நிமிடங்கள் மறைகிறதே
இதய வாசல் திறக்கிறதே
இதழ்கள் மட்டும் மறுக்கிறதே
விரல்களின் தயக்கம் விடுபடுமா
வீணையின் கேள்விக்கு விடை வருமா
வண்ணம் எல்லாம் உரு பெறுமா
என் காதல் ஓவியம் உயிர் பெறுமா
பனிமூட்டப் பாதை உள்ளே
பார்வை தெரியாமல்
பாவை நெஞ்சம் அது
சிறையென்று அறியாமல்
சிக்கித் தவித்தேன்
காதல் பித்துப் பிடித்தேன்
மோகம் எனும் தீயினுள்ளே
நாளும் குளித்தேன்
மீண்டும் வந்தாள் என் தேவதையே
தயக்கம் என்னில் இன்று காணலையே
பக்கம் வந்த அவள் கைவிரலை
பற்றிக் கொண்டேன் அவள் விலகவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக