இதயத்தில்
கூடு கட்டுகிறது
அடிக்கடிக் கீச்சிடுகிறது
ஆள் அரவம் இல்லாத
இந்த இடத்தை
எப்படிச் சரியாக தேர்ந்தெடுத்தது?
அது பறந்து போகையில்
இதமாக இருக்கின்றது
இருந்தாலும்
எப்போது வந்தமரும்
என்றுதான்
இதயம் துடிக்கின்றது...
நெடுங்காலம் இருப்பதாலே
அந்தப் பறவைக்குப் பெயர் வைத்தேன்
மனதிற்குள் உச்சரிப்பேன்
பறவைக்கும் சொன்னதில்லை
பெயரைத்தான் சிறை வைத்தேன்
உயிரே
உனை ஒருபோதும் வைக்க மாட்டேன்
நீ
இருந்தால் இரு
பறந்தால் பற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக