இரவெல்லாம் முழு மூச்சாய்
தூங்கி உழைத்து
ஆற்றலை ஈட்டுகிறேன்
பகலெல்லாம் பலப்பல
துண்டுத்துண்டுக் காரியங்களில்
ஓய்வெடுத்துக் கரைக்கிறேன்
பகலெல்லாம் முழு மூச்சாய்
ஒரு வேலை
ஒரு ஓய்வு வேண்டும்
பொழுதெல்லாம்
ஒரு மூச்சில்
ஒரு பயணம் போகும்வரை...
குடி மறுவாழ்வு மையங்களின் நடத்தை சரியில்லையாம்
சரிதான்... சரிதான்...
நியாயமான கூற்று தான்
உடல்நிலை சரியில்லாததால்
மருத்துவமனைக்கு போனான்
மனநிலை சரியில்லாததால்
மனநிலை காப்பகம் போனான்
வாடகை ஏற்றத்தால்
பத்து வீடுகள் மாறிப் போனான்
தாய் நாட்டில் தொடர்ந்து போர்
அகதிகள் முகாமிற்குத் தப்பிப் போனான்
இல்வாழ்க்கை பிடிக்காமல்
துறவு வாழ்வைத் தேடிப் போனான்
கலவில் மாட்டிக் கொண்டு
சிறைச்சாலைக்குப் போனான்
வன் கொலைச் செய்தான்
தூக்கு மேடைக்குப் போனான்
என்ன செய்து என்ன செய்து
குடி மறுவாழ்வு மையத்திற்குப் போனான்?
குடி மறுவாழ்வு மையங்களின் நடத்தை சரியில்லையாம்
சரிதான்... சரிதான்...
நியாயமான கூற்று தான்
இதயத்தில்
கூடு கட்டுகிறது
அடிக்கடிக் கீச்சிடுகிறது
ஆள் அரவம் இல்லாத
இந்த இடத்தை
எப்படிச் சரியாக தேர்ந்தெடுத்தது?
அது பறந்து போகையில்
இதமாக இருக்கின்றது
இருந்தாலும்
எப்போது வந்தமரும்
என்றுதான்
இதயம் துடிக்கின்றது...
நெடுங்காலம் இருப்பதாலே
அந்தப் பறவைக்குப் பெயர் வைத்தேன்
மனதிற்குள் உச்சரிப்பேன்
பறவைக்கும் சொன்னதில்லை
பெயரைத்தான் சிறை வைத்தேன்
உயிரே
உனை ஒருபோதும் வைக்க மாட்டேன்
நீ
இருந்தால் இரு
பறந்தால் பற...
பார்க்கவில்லை
பேசவில்லை
இருக்கத்தான் செய்கிறது கடவுள்
இருக்கத்தான் செய்கிறது அன்பு
யார் தடுப்பது?
இயற்கை விதித்தது
மலரும் கனியும்
மழையும் காற்றும் ஒளியும் இருக்கிறது
யார் தடுப்பது?
இயற்கை விதித்தது
நம் உறவை...
இரு கண்கள் இதமாய் இணைகிறதே
இருக்கின்ற நிமிடங்கள் மறைகிறதே
இதய வாசல் திறக்கிறதே
இதழ்கள் மட்டும் மறுக்கிறதே
விரல்களின் தயக்கம் விடுபடுமா
வீணையின் கேள்விக்கு விடை வருமா
வண்ணம் எல்லாம் உரு பெறுமா
என் காதல் ஓவியம் உயிர் பெறுமா
பனிமூட்டப் பாதை உள்ளே
பார்வை தெரியாமல்
பாவை நெஞ்சம் அது
சிறையென்று அறியாமல்
சிக்கித் தவித்தேன்
காதல் பித்துப் பிடித்தேன்
மோகம் எனும் தீயினுள்ளே
நாளும் குளித்தேன்
மீண்டும் வந்தாள் என் தேவதையை
தயக்கம் என்னில் இன்னும் போகலையே
நீங்கிச் சென்றாள் சிறு சிரிப்புதிர்த்து
பின் தொடர்ந்தேன் அவள் நிழலணைத்து
இரு கண்கள் இதமாய் இணைகிறதே
இருக்கின்ற நிமிடங்கள் மறைகிறதே
இதய வாசல் திறக்கிறதே
இதழ்கள் மட்டும் மறுக்கிறதே
விரல்களின் தயக்கம் விடுபடுமா
வீணையின் கேள்விக்கு விடை வருமா
வண்ணம் எல்லாம் உரு பெறுமா
என் காதல் ஓவியம் உயிர் பெறுமா
பனிமூட்டப் பாதை உள்ளே
பார்வை தெரியாமல்
பாவை நெஞ்சம் அது
சிறையென்று அறியாமல்
சிக்கித் தவித்தேன்
காதல் பித்துப் பிடித்தேன்
மோகம் எனும் தீயினுள்ளே
நாளும் குளித்தேன்
மீண்டும் வந்தாள் என் தேவதையே
தயக்கம் என்னில் இன்று காணலையே
பக்கம் வந்த அவள் கைவிரலை
பற்றிக் கொண்டேன் அவள் விலகவில்லை...
குற்றம் குறைய பாடுபடுவோம்
குற்றம் கலைய பாடுபடுவோம்
இந்தியராய் ஒன்றுபடுவோம்...
இனம் பேசி
சினம் கூட்ட
தொடும் குற்றம் உச்சியை...
கட்சியை, ஆட்சியை, பதவியை
கடந்து நின்று
இந்தியராய் காட்டுவோம் சக்தியை...
குற்றம் குறைய பாடுபடுவோம்
குற்றம் கலைய பாடுபடுவோம்
இந்தியராய் ஒன்றுபடுவோம்...
வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்
அர்த்தமில்லாததையே பேசினோம்
அர்த்தமுள்ளதாக மாறியது பொழுது
அர்த்தமுள்ளதாக தோன்றியது வாழ்வு...
தாகம் தீர்க்க
கண்ணீர் தேடி வரும்
இரவு
இருளுக்குள்
சுரக்கும் சுனையை
சத்தமில்லாமல் பருகும்
நான் அழுது
நீ குடிக்க வா
கண்ணீர் பால்
இப்படியே இப்படியே
இல்லாமல் போகிறது
எனக்கான நாளைய பால்...