உன்னிடம் சொல்ல...
ஆயிரம் வார்த்தைகளை எடுத்து வந்தேன்
ஆயினும் உன் பெயரைக் கூட
சொல்ல முடியாமல் தயங்கி நின்றேன்
விலகிச் செல்லாமல் நீயும்
தயங்கித் தயங்கி நானும்
நின்றபோது
நீ கொண்டுவந்த வார்த்தைகளை
நான் படித்தேன்
நான் கொண்டு வந்ததும்
நீ கொண்டு வந்ததும்
மட்டுமல்ல
காதல் கொண்டு
யார் கொண்டு வருவதும்
இந்த ஆயிரம் வார்த்தைகள் தான்...
இந்த ஆயிரம் வார்த்தைகள்
ஒரு சேர மலர்ந்தால்
ரோஜா...
இந்த ஆயிரம் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்தால்
கண்ணீர்...
ஆயிரத்தில் ஒரு வார்த்தை
உதிராத உயிர் வார்த்தை
உன் பெயர்...
உன் பெயரை
திரும்பத் திரும்ப உள்ளே விதைத்து
ஆயிரம் வார்த்தையை வளர்க்கப் பார்க்கிறேன்
உன்னிடம் சொல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக