புதன், 31 ஜூலை, 2019

மலரைப் போல
மௌனமாக உதிர்ந்துவிட்டாய்

நாட்கள்
நகர நகர தான்
நரகம் தெரிகிறது

சிறகைப் பிரிந்த
இறகின் தவிப்பு

மனதின் உள்ளே
எரிமலைக் குழம்பு

நரம்பு வெளிகளிலே
வலி வெள்ளம்

சுடு மணல்
மீன்யெனத் துள்ளும்

எங்கு ஓடியும்
உள்ளுக்குள் நீ

காசில்லாதவன்
உனக்காக மூச்சு வாங்கினேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக