என் அறை
முழுவதும் ஏக்கம்,
கண்கள் எதையோ
தேடித்தேடித் தோற்கும்...
இதயம் நிரம்ப
வலிகள் பூக்கும்,
விடியவிடிய நினைவுகள்
மணமாய் கமழும்...
இரண்டு எழுத்துகள்தான்
அவள் பெயர்,
ஏனோ என் மனதில்
நீண்டு கொண்டே போகிறது
நினைவிலும் கனவிலும்
கலந்துவிட்டாய்
கண்களில் இருந்து
ஏன் மறைந்துவிட்டாய்
சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறாய்
வலிகளை மட்டும் விதைகளாய்
மனதில் பதிந்து போகிறாய்
விதைகள் விளைகின்றன
இன்ப மின்னல் பூக்கின்றன
உன் கனவைக் கைபிடித்து
காத்திருப்பேன் உயிர்ப்பிழைத்து...
முழுவதும் ஏக்கம்,
கண்கள் எதையோ
தேடித்தேடித் தோற்கும்...
இதயம் நிரம்ப
வலிகள் பூக்கும்,
விடியவிடிய நினைவுகள்
மணமாய் கமழும்...
இரண்டு எழுத்துகள்தான்
அவள் பெயர்,
ஏனோ என் மனதில்
நீண்டு கொண்டே போகிறது
நினைவிலும் கனவிலும்
கலந்துவிட்டாய்
கண்களில் இருந்து
ஏன் மறைந்துவிட்டாய்
சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறாய்
வலிகளை மட்டும் விதைகளாய்
மனதில் பதிந்து போகிறாய்
விதைகள் விளைகின்றன
இன்ப மின்னல் பூக்கின்றன
உன் கனவைக் கைபிடித்து
காத்திருப்பேன் உயிர்ப்பிழைத்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக